Wednesday, February 25, 2009

குறுந்தகவல் (SMS) மூலம் இரத்தம் பெறலாம்

இது முக்கியமான மற்றும் மிகவும் பயனுள்ள தகவல், உங்களுக்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும் தெரிவிக்கவும். இப்பொழுது இரத்தம் பெறுவது மிகவும் எளிது, இதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது என்னவெனில் உங்கள் அலைபெசியிலிருந்து "BLOOD" <உங்களுக்கு தேவையான இரத்தப் பிரிவு> டைப் செய்து 96000 97000 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.

உதாரணமாக "BLOOD B+" .

உடனே ஒரு இரத்த கொடையாளர் உங்களை தொடர்பு கொள்வார்.

இந்த தகவலை பலருக்கும் தெரிவிப்பதன் மூலம் பலருடைய வாழ்வை காப்பாற்ற முடியும் என நம்புகிறோம்.

Friday, February 20, 2009

அரசியல்வாதிகள் மக்களிடம் கேட்க விரும்பும் 10 கேள்விகள்!

1) ஓட்டுக்கு பணம் கொடுக்கும்போது வேண்டாம் என்று ஏன் சொல்வதில்லை? அதுவும் எல்லா கட்சிகாரர்களிடமும் பணம் வாங்கிக் கொண்டு அல்வா கொடுக்கும் உங்களுக்கு, நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அதே அல்வாவை திருப்பி கொடுப்பது தவறா?

2) ஓட்டுக்கு பணம் வாங்கும்போதே தெரியவில்லையா உங்களுக்கு, நாங்களும் ஜெயித்த பிறகு அந்த பணத்தை உங்களிடமிருந்தே பல மடங்காக கறந்து விடுவோம் என்று?

3) ஓட்டுக்கு பணம் வாங்கிய நீங்கள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பணமே இல்லாமல் ஒரு காரியத்தை முடித்துக் கொடுப்போம் என்று எதிர்பார்கிறீர்கள்?

4) ஓட்டுக்கு லஞ்சம் வாங்கிய நீங்கள் எங்கள் ஆட்சியை லஞ்சம் நிறைந்த ஊழல் ஆட்சி என்று எப்படி சொல்கிறீர்கள்?

5) நாங்கள் எந்த தவறு செய்தாலும் சில மாதங்களிலேயே எப்படி உங்களால் மறந்து விட முடிகிறது?

6) ஒரு முறை எங்களை தோற்கடித்துவிட்டு அடுத்த முறை எங்களை ஜெயிக்க வைத்து விடுகிறீர்களே, நாங்கள் திருந்தி விட்டோம் என்று எப்படி ஒரு முடிவுக்கு நீங்களாகவே வருகிறீர்கள்?

7) நாங்கள் தேர்தலில் கொடுக்கும் வாக்குறுதிகளை எல்லாம் மற்றும் நாங்கள் மேடையில் பேசுவதை எல்லாம் எப்படி உங்களால் நம்ப முடிகிறது?

8) ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி மாறிக்கொள்ளும் எங்களுக்கு எப்படி வோட்டுப் போட்டு ஜெயிக்க வைக்கிறீர்கள்?

9) உங்கள் ஜாதி வேட்பாளருக்கு எப்படி கண்ணை மூடிக்கொண்டு ஓட்டுப் போடுகிறீர்கள்? அவரும் அதே குட்டையில் ஊறிய மட்டைதான் என்று ஏன் தெரிவதில்லை?

10) இன்னும் எத்தனை வருடங்கள் இப்படி ஏமாந்த இழிச்சவாயர்களாய் இருப்பதாய் உத்தேசம்?

இன்னும் எவ்வளவோ கேள்விகள் இருக்கிறது! இருந்தாலும் இப்போது 10 கேள்விகள் கேட்பதுதான் பேஷனாக இருப்பதால் இத்தோடு முடித்துக் கொள்கிறோம்!

Thursday, February 19, 2009

வாஜ்பாய், புஷ், முஷாரப் உரையாடல் -- நகைச்சுவை

நண்பர் மெயிலில் அனுப்பியது.

இரட்டை கோபுரம், பெண்டகன் போன்றவை தலிபான்களால் தாக்கப்பட்ட பிறகு நடைபெற்ற தொலைபேசி கற்பனை உரையாடல்கள்!

சீனாவின் அதிபர்: இந்த பயங்கர தாக்குதலை கேள்விப்பட்டு மிகவும் வருந்துகிறேன்! இது ஒரு மிகப் பெரிய தாக்குதல். ஆனாலும் கவலைப் படாதீர்கள், எந்த டாகுமென்ட்ஸ் பெண்டகனிலிருந்து தொலைந்திருந்தாலும் நாங்கள் உங்களுக்கு கொடுத்து உதவுகிறோம், பென்டகனின் அனைத்து டாகுமென்ட்ஸ் நகலும் எங்களிடம் இருக்கிறது.

-------------------------------

முஷாரப்: திரு அதிபர் அவர்களே! இது ஒரு மிகப்பெரிய தாக்குதல்! என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்தனை மக்கள்.. எவ்வளவு சிறந்த கட்டிடங்கள்... மிகவும் வருந்துகிறேன். ஆனாலும் இதில் எங்களுக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை என்பதைத் தெரிவிக்கிறேன்.

புஷ்: எந்த மக்கள்? எந்த கட்டிடம்? ? எதைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்??

முஷாரப்: ஒ! அமெரிக்காவில் இப்பொது என்ன டைம்?

புஷ்: காலை 8 மணியாகிறது.

முஷாரப்: ச்சே! மன்னிக்கவும். நான் இன்னும் ஒரு மணி நேரம் கழித்துக் கூப்பிடுகிறேன்.

------------------------------

வாஜ்பாயும் புஷும் ஒரு பாரில் அருகருகே அமர்ந்து உள்ளனர். அப்போது ஒரு நபர் அந்த பாருக்கு வருகிறார். சிப்பந்தியிடம் அவர்கள் வாஜ்பாய் மற்றும் புஷ்சா என்று கேட்கிறார்.
"ஆம்! அவர்கள்தான்!" என்றார் சிப்பந்தி.

உடனே அந்த நபர் அவர்களிடம் சென்று "ஹலோ! இங்கு என்ன செய்கிறீர்கள்?" என்றார்.
புஷ்: "நாங்கள் மூன்றாம் உலகப் போரைப் பற்றி விவாதிக்கிறோம்."

அந்த நபர், "ஒ! உண்மையாகவா? என்ன நடக்கப் போகிறது? " என்று கேட்கிறார்.

வாஜ்பாய்: "நல்லது! நாங்கள் 14 மில்லியன் பாகிஸ்தானியர்களையும், ஒரு சைக்கிள்
ரிப்பேர் செய்கிறவரையும் கொல்லப் போகிறோம்"

உடனே அந்த நபர் மிகவும் ஆச்சரியத்துடன் "என்னது ஒரு சைக்கிள் ரிப்பேர் செய்பவரா?" என்று கேட்கிறார்.

வாஜ்பாய் புஷ் ஐப் பார்த்து, "பார்த்தீர்கள? நான் அப்பவே சொன்னேன், ஒருவரும் 14 மில்லியன் பாகிஸ்தானியர்களைப் பற்றி கவலைப் படமாட்டார்கள்! நாம் திட்டமிட்டபடி இதை செய்து முடித்துவிடுவோம்"

--------------------------------------------

நிலவில் பாகிஸ்தானி....

கேள்வி: நிலவில் 1 பாகிஸ்தானி இருந்தால்?
பதில்: பிரச்சனை......
கேள்வி: நிலவில் 10 பாகிஸ்தானி இருந்தால்?
பதில்: பிரச்சனை......
கேள்வி: நிலவில் 100 பாகிஸ்தானி இருந்தால்?
பதில்: பிரச்சனை......
கேள்வி: நிலவில் எல்லா பாகிஸ்தானியும் இருந்தால்?
பதில்: ......... எல்லா பிரச்சனையும் முடிந்தது...

Thursday, February 12, 2009

கடவுள் எப்போதுமே சரியாகத்தான் இருக்கிறார்!

ஒரு சமயம் ஒரு நபர் கடவுளிடம் ஒரு மலரையும் வண்ணத்துப் பூச்சியையும் வேண்டினார். ஆனால் கடவுள் அந்த நபருக்கு ஒரு கற்றாளையும், கம்பளிப் பூச்சியையும் அளித்தார். அந்த நபருக்கோ மிகவும் வருத்தம். அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை ஏன் தான் கேட்டதற்கு மாறாக கடவுள் அளித்தார் என்று. பின் கடவுளுக்கு அதிகமான மக்களை காக்கும் பொறுப்பு இருக்கும் என்பதால் அவரை எதுவும் கேட்க வேண்டாம் என்று நினைத்துக் கொண்டார்.

நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் அந்த நபர் கடவுள் வழங்கிய கற்றாளையும், கம்பளிப் பூச்சியையும் பார்க்க சென்றார். என்ன ஆச்சரியம்! அந்த அருவருப்பான, முட்கள் நிறைந்த கற்றாளையிலிருந்து ஒரு அழகிய வண்ண மலர் பூத்திருந்தது. மேலும் அந்த காணச்சகிக்காத கம்பளிப் புழு ஒரு அழகிய வண்ணத்துப் பூச்சியாக மாறியிருந்தது.

ஆம். கடவுள் எப்போதும் நமக்கு சரியானவற்றையே செய்கிறார். நமக்கு தவறாக தோன்றினாலும் கடவுளின் பாதை எப்போதும் மிகச் சரியாகவே இருக்கிறது.

நீங்கள் கடவுளிடம் ஒன்று கேட்டு, அவர் வேறு ஒன்று கொடுத்தால் நம்புங்கள் அவரை!

நமக்கு தேவையானவற்றை மிகச் சரியான நேரத்தில் எப்போதுமே கடவுள் அளிப்பார்.

நாம் என்னவெல்லாம் விரும்புகிறோமோ அவை எல்லாமே நமக்கு தேவையானதாக இருக்காது.

கடவுள் எப்போதுமே நம் குறைகளை நிவர்த்திக்கத் தவற மாட்டார். எனவே அவரை எந்தவித சந்தேகமும், முணுமுணுப்பும் இல்லாமல் நம்பிக்கையுடன் தொடருங்கள்!

இன்று முட்களாக இருப்பது நாளை மலராக ஆகிவிடும்!

எவர் தன்னை முழுமையாக கடவுளிடம் நம்பிக்கையாக ஒப்படைத்து விடுகின்றனரோ அவர்களுக்கு கடவுள் எப்போதும் மிகச் சிறந்தவற்றையே அளிப்பார்.

Thursday, February 5, 2009

முடியுமா உங்களால் இந்த சாலையில் பயணிக்க?

பொலிவியா நாட்டில் எவ்வளவு ஆபத்தான சாலைகள் என பாருங்கள். இந்த சாலை ஸ்ட்ரீம்னையா (Stremnaya) ரோடு என்றும் பட்டப் பெயராக "The Road of Death" என்றும் அழைக்கப் படுகிறது. நண்பர் அனுப்பிய மெயிலில் பார்க்க நேர்ந்தது, உங்கள் பார்வைக்காக கீழே.......









அல்லது இது போன்ற மலைப்பாதை நெடுஞ்சாலைகளாகவே இருக்கும்.

























Monday, February 2, 2009

அபார்ட்மென்ட்ஸ் சிண்ட்ரோம் - ஒரு புது வகையான நோய்

இப்பொழுதெல்லாம் நகரங்களில் பெரும்பாலும் குடியிருப்புகள் அபார்ட்மென்ட்ஸ் எனப்படும் அடுக்கு மாடிகளிலேதான் அமைகின்றன. அதில் வாழும் பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிப்பது இல்லை. இதற்கு பாதுகாப்பு மற்றும் சில சூழ்நிலைகள் காரணங்களாகின்றன. அந்த குடும்பங்களில் ஒரே ஒரு குழந்தை இருக்கலாம். மேலும் அக்கம் பக்கத்து வீடுகளில் சரியான பழக்கம் இல்லாத காரணத்தினால் மற்றவர்களின் குழந்தைகளோடு விளையாடவும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.

இத்தகைய சூழ்நிலைகளில் வளரும் குழந்தைகள் சரியான காற்றோற்றம் மற்றும் சூரிய வெளிச்சம் தங்களின் உடலில் படாமல் சிலவித உடல் கோளாறுகளினால் பாதிக்கப் படுகிறார்கள். போதிய சூரிய வெளிச்சம் அவர்களின் உடலில் படாததால் வைட்டமின் - டி குறைவு ஏற்படுகிறது. இதனால் அபார்ட்மென்ட்ஸ் சிண்ட்ரோம் எனப்படும் ஒரு வகையான நோயால் பாதிக்கப் படுகிறார்கள். இந்நோய் முடி வளர்ச்சி, தோல் குறைபாடு மற்றும் சில பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.

குழந்தைகள் மட்டுமல்ல, பெரியோர்கள் கூட நகரங்களில் அதிகாலையிலேயே அலுவலம் சென்று, உணவு, குடிநீர் மற்றும் அனைத்து தேவைகளையும் தங்கள் அலுவலகங்களிலேயே முடித்து கொண்டு இரவு வீடு திரும்புகிறார்கள். இதில் எங்கே அவர்களுக்கு போதிய வைட்டமின் - டி, சூரிய ஒளியினால் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது? நமது உடலுக்கு தேவையான வைட்டமின் - டி, இலவசமாகவும், பெருமளவும் கிடைக்கக் கூடிய ஒரே ஆதாரம் சூரிய ஒளி மட்டுமே.

எனவே பெற்றோர்களே! தினமும் நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் வெளியே சென்று சூரிய ஒளியினால் கிடைக்கும் மகத்தான வைட்டமின் - டி யை பெற தவறாதீர்கள். எவ்வளவுக்கெவளவு நாம் இயற்கையை விட்டு விலகுகிறோமோ அவ்வளவு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கூடிய மட்டும் இயற்கையோடு ஒத்து வாழ்ந்து நலமுடன் வாழ முயற்சிப்போம்.

சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பார்த்த செய்தியினை ஆதாரமாகக் கொண்டு இந்தப் பதிவு எழுதப்பட்டது.