Wednesday, August 26, 2009

காலி ஜாடி மற்றும் இரண்டு கோப்பை காபி-யின் கதை

உங்களின் வாழ்க்கை 24 மணி நேரமும், நேரமின்மையால் ஒவ்வொரு செயலையும் கடினப்பட்டு சமாளிப்பதாக உணர்கிறீர்களா? 24 மணி நேரம் போதாது என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கு "காலி ஜாடி மற்றும் இரண்டு கோப்பை காபி-யின் கதை" உதவும்.

ஒரு பேராசிரியர் தனது தத்துவவியல் வகுப்பறையில், சில பொருட்களை தனது மேசையில் வைத்திருந்தார். வகுப்பு தொடங்கியபோது ஒரு மிகப்பெரிய காலியான ஜாடியை எடுத்து அதில் கோல்ப் பந்துகளை போட்டு நிரப்பினார். பின் மாணவர்களை நோக்கி இந்த ஜாடி நிரம்பி உள்ளதா என்று கேட்டபோது மாணவர்கள் அதை ஆமோதித்தனர். பின் அதே ஜாடியில் சிறு சிறு கூழாங் கற்களைப் போட்டு இந்த ஜாடி நிரம்பி உள்ளதா என்று கேட்டபோது அப்போதும் மாணவர்கள் அதை ஆமோதித்தனர்.

பின் கொஞ்சம் மணலை எடுத்து அதே ஜாடியில் போட்டபோது இருக்கும் இடைவெளிகளில் அந்த மணல் போய் சேர்ந்தது. மீண்டும் ஒருமுறை மாணவர்களிடம் அதே கேள்வியை அதாவது ஜாடி நிரம்பி உள்ளதா என்று கேட்டபோது அவர்கள் ஆம் என்றே சொன்னர்.

பின் பேராசிரியர் அதே ஜாடியில் இரண்டு கோப்பை காபியை ஊற்றினார். மனல்களுக்கிடையில் அந்த காபி சென்று சேர்ந்து முழுமையாக அந்த ஜாடியை நிரப்பியது. மாணவர்கள் சிரித்தனர்.


சிரித்த மாணவர்களை நோக்கி "இது உங்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது" என்றார் பேராசிரியர். ஜாடியில் போட்ட கோல்ப் பந்துகள் மிக முக்கியமானது - கடவுள், குடும்பம், குழந்தைகள், ஆரோக்கியம், நண்பர்கள், மிகவும் விரும்பும் பொருட்கள்... போன்றது. எல்லாவற்றையும் இழந்து, மேலே சொன்னவை மட்டுமே உங்களிம் இருந்தாலும் உங்கள் வாழ்க்கை முழுமையானதாக இருக்கும்.

கூழாங் கற்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள வேலை, வீடு மற்றும் கார் போன்றது. மணலானது உங்கள் வாழ்க்கையில் எஞ்சி உள்ள எல்லாவற்றையும் போன்றது - மிகச் சிறியது.

அந்த ஜாடியில் முதலாவதாக மணலைப் போட்டிருந்தால் கூழாங் கற்களையோ அல்லது கோல்ப் பந்துகளையோ ஜாடியில் போட்டிருக்க முடியாது. இதுவேதான் நம் வாழ்க்கைக்கும் பொருந்தும். எனவே எப்போதும் உங்கள் வாழ்க்கையில் மிகச் சிறிய விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தீர்கள் என்றால், பின் மிக முக்கியமான விசயங்களுக்கு உங்களால் நேரம் ஒதுக்க முடியாது. ஆகவே உங்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாதற்கான விசயங்களுக்கு நேரம் ஒதுக்கி முக்கியத்துவம் கொடுங்கள்.

உங்கள் குழந்தைகளிடம் விளையாடுங்கள்.
உடல் நலத்தை அவ்வப்போது செக்கப் செய்யுங்கள்.
உங்கள் துணையை டின்னருக்கு வெளியே அழைத்து செல்லுங்கள்.

எப்போதும் உங்கள் இல்லத்தை சுத்தம் செய்து, தேவை இல்லாத குப்பைகளை அகற்ற கண்டிப்பாக நேரம் இருக்கும்.

கோல்ப் பந்துகளை முதலில் நிரப்ப கவனமாக இருங்கள் - மிக முக்கியமானவற்றிற்கு நேரம் ஒதுக்குவது.

உங்களுடைய முதன்மையானவற்றை அட்டவணைப் படுத்துங்கள் - மிகச் சரியாக.

மற்றவை மணலைப் போன்றது.

அப்போது ஒரு மாணவர் எழுந்து அந்த காபி எதைக் குறிக்கிறது என்று கேட்டார். பேராசிரியர் புன்முறுவலுடன் "மிக்க மகிழ்ச்சி! இந்த கேள்வியை கேட்டதற்கு" என்றார்.

உங்கள் வாழ்க்கையில் எதெதற்கு எப்படி முக்கியத்துவம் கொடுப்பீர்களோ தெரியாது, ஆனால் எப்போதும் உங்கள் நண்பர்களுடன் அமர்ந்து ஒரு கோப்பை காபி அருந்த உங்களிடம் நேரம் கண்டிப்பாக இருக்கும், இதைதான் அது பிரதிபலிக்கிறது என்று சொல்லி அந்த வகுப்பை முடித்தார்.

Thursday, August 20, 2009

கணினியில் எல்லா சாப்ட்வேர்களையும் அப்டேட்டில் வைத்திருக்க

நமது கணினியில் பலவிதமான சாப்ட்வேர்களை பதிவு செய்து வைத்திருப்போம். அடிக்கடி புதிது புதிதாக நமக்கு பிடித்த சாப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்வோம். சில சாப்ட்வேர்கள் தானாகவே அப்டேட் செய்துகொள்ளும். சிலவற்றை நாமாக அப்டேட் செய்து கொள்ளவேண்டும்.

நமது கணினியில் உள்ள அனைத்து சாப்ட்வேர்களுக்கும் அப்டேட் செய்ய நமக்கு ஒரு ஆலோசகர் கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்தானே? நமக்கு இருக்கும் வேலைப் பளுவில் ஒவ்வொரு சாப்ட்வேர்யும் சரிபார்த்துக் கொண்டிருப்பது சாத்தியம் இல்லைதானே?

அதற்காகவே ஒரு இலவச டூல் இருக்கிறது. அதன் பெயர் செக்குனியா(Secunia). இதை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து வைத்து விட்டால், ஒரு சாப்ட்வேர் அப்டேட் செய்யும் நிலை வரும்போது உங்களை எச்சரிக்கை செய்து, அதற்குரிய முகவரியையும் கொடுக்கும்.

நீங்கள் இந்த டூலை இன்ஸ்டால் செய்த பிறகு உங்கள் டாஸ்க் பாரில் கீழே படத்தில் அம்பு குறியிடப்பட்டு காட்டியபடி ஒரு ஐகான் வரும். அதை க்ளிக் செய்தால் உங்கள் கணினியில் உள்ள அனைத்து சாப்ட்வேர்-களும் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறதா என அறிந்து கொள்ளலாம்.



உங்கள் கணினியில் உள்ள அனைத்து சாப்ட்வேர்களும் சரியாக அப்டேட் செய்யப் பட்டிருந்தால் 100 % என்றும் பச்சை நிற பாரும்(Green Bar) தெரியும் . ஒரு வேளை ஏதாவது சாப்ட்வேர் அப்டேட் செய்யப்படாமல் இருந்தால் மஞ்சள் நிறமும் அதற்குரிய சதவீதமும் (96, 98, 90...) காட்டும். மிகவும் மோசமாக இருந்தால் சிவப்பு நிறத்தில் உங்களை எச்சரிக்கும்.




இன்னும் ஏன் தாமதம்? இந்த http://secunia.com/vulnerability_scanning/personal/ தளத்திளுருந்து தரவிறக்கி இன்ஸ்டால் செய்து கொண்டு, உங்கள் கணினியில் உள்ள அனைத்து சாப்ட்வேர்களையும் அப்டேட்டில் வைத்திருங்கள்!!!

Monday, August 10, 2009

சர்க்கரை நோய்(நீரிழிவு) - அறிந்துகொள்ள வேண்டியது

முன்னொரு காலத்தில் சர்க்கரை நோய் என்பது வயதான பணக்காரர்களுக்கு மட்டுமே வரக்கூடிய நோய் என இருந்தோம். ஆனால் தற்போது சர்வ சாதாரணமாக ஏழை, செல்வந்தர், இளவயது, முதுவயது என எல்லா தரப்பினரையும் இது பாதிக்கிறது என்பது உண்மை.

அதுமட்டுமல்ல. இன்னும் சில வருடங்களில் உலகிலேயே அதிக அளவாக இந்தியாவில் சுமார் 7 கோடி பேருக்கு இந்நோய் இருக்கும் என்றும், அதற்க்கு அடுத்தப் படியாக சீனாவில் 6 கோடி பேருக்கு இந்நோய் இருக்கும் என்றும் ஒரு சமிபத்திய ஆய்வு சொல்கிறது. இன்னும் சொல்லப் போனால் பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகளையும் இந்த அரக்கன் விட்டு வைப்பதில்லை என்பது அதிர்ச்சி அளிக்கக் கூடிய செய்தி.

நம் உடலில் நமக்குத் தெரியாமலேயே அமைதியாக இருந்து நம் உடலை பாதிக்கும் ஆற்றல் பெற்றது நீரிழிவு நோய்.

எனவே நீரிழவு நோய்ப் பற்றி இங்கே நான் படித்து தொகுத்தவற்றை சுருக்கமாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சர்க்கரை நோய் என்றால் என்ன?
கணையத்தில் இன்சுலின் போதுமான அளவு சுரக்காதபோது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிப் போவதையே சர்க்கரை நோய் என்கிறோம்.

அறிகுறிகள்:
உடலில் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாமல் அமைதியாக இருந்து கொல்லும் நோய் இது. நீங்கள் ஏதேனும் ஒரு உபாதைக்கு டாக்டரிடம் செல்லும்போதுதான் உங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரியவரும். அதிகமான தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிகமான பசி எடுத்தல், எடை குறைதல் மற்றும் பாதகங்கள் மரத்து போதல் போன்றவற்றை அறிகுறிகளாக எடுத்துக் கொள்ளலாம்.

பரம்பரை நோயா?
ஆம். இது ஒரு பரம்பரை நோய் என்பதால், பெற்றோருக்கு இருக்கும் பட்சத்தில், ஒருவர் தனது 25 வயதுக்கு மேல் அறிகுறி இல்லாவிட்டாலும் நீரிழிவு உள்ளதா என்பதை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

இரத்தத்தில் சர்கரையின் அளவு:

சாதரண அளவு:
சாப்பிடுவதற்கு முன்பு: 80 - 120 மில்லி கிராம்.
சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து: 120 - 160 மில்லி கிராம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு:
சாப்பிடுவதற்கு முன்பு: 130 மில்லி கிராமுக்கு கீழ்.
சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து: 180 மில்லி கிராமுக்கு கீழ்.


பாதிக்கப்படும் உறுப்புகள்:
தலை முதல் கால் வரை அனைத்து உறுப்புகளும். குறிப்பாக இதயம், சிறுநீரகங்கள், கால் போன்ற உறுப்புகள். எனவே இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திறுப்பது மிக மிக மிக முக்கியம்....

இரண்டு வகையான சர்க்கரை நோய்:
1. I.D.D.M (Insulin-dependent diabetes mellitus) டைப் 1 சர்க்கரை நோய்:
கணையத்தில் இன்சுலின் கொஞ்சம் கூட சுரக்காமல் இருக்கும் நிலையில், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகும். இந்த வகையை சேர்ந்தவர்களுக்கு வாழ் நாள் முழுவதும் இன்சுலின் ஊசி போட்டுகொண்டிருக்கவேண்டும். பெரும்பாலும் குழந்தைகளுக்குத்தான் இந்த "டைப் 1 சர்க்கரை நோய்" வருகிறது.


2. N.I.D.D.M (Non-Insulin-Dependent Diabetes Mellitus) டைப் 2 சர்க்கரை நோய்:
கணையத்தில் இன்சுலின் முழுமையாக இல்லாமல் குறைவாக சுரந்தாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகும். இவர்களுக்கு இன்சுலின் ஊசி தேவைபடாது. தினமும் மருந்து, மாத்திரை எடுதுக்கொள்வதின் மூலமே சர்க்கரையின் அளவை கட்டுப் படுத்த முடியும். இதை "டைப் 2 சர்க்கரை நோய்" என்பர்.

தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் வழிகள்:
1. கட்டுப்பாடான உணவுப்பழக்கம்.
2. இரத்தத்தில் சர்க்கரை அளவை சரியான இடைவெளிகளில் பரிசோதித்துக் கட்டுக்குள் வைத்திருத்தல்.
3. உடற்பருமனை தவிர்த்தல்.
4. தினமும் உடற்பயிற்சி.
5. தினமும் நடைப்பயிற்சி.
6. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை 200 மில்லி கிராமிர்க்குள் வைத்திருத்தல்.
7. மன அழுத்தம், அதிகமான கவலை இல்லாமல் மனதை ரிலாக்ஷாக வைத்துக்கொள்ளுதல்.

சர்க்கரை நோயாளிகள் சேர்த்துகொள்ளவேன்டியது:
வெண்ணெய் எடுத்த மோர்
முருங்கைக்காய்
வெந்தயம்
கடுகு
தக்காளி ஜூஸ்
பூண்டு
பச்சை காய்கறிகள்
வேள்ளெறிப் பிஞ்சு
மக்காச்சோளம்
சோளப்பொறி
முட்டைகோஸ்
கொய்யாப்பழம்
பப்பாளிப்பழம்
கொத்தமல்லி
பாகற்காய்
மிளகு
வாழைத்தண்டு
கீரை வகைகள்
பயறு வகைகள்
எலுமிச்சை
வடிகட்டிய சூப்
மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகள்...

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேன்டியது:
சர்க்கரை சேர்த்த காபி, தேநீர், பால்.
சர்க்கரை
க்ளுகோஸ்
ஐஸ்க்ரீம்
மதுபானங்கள் மற்றும் புகையிலை
கேக்
தேன்
ஜெல்லி
கல்கண்டு
கிழங்கு வகைகள்
இனிப்புப் பண்டங்கள் அல்வா, புர்பிய், புட்டு, ஜாம்
பாலாடைகட்டி
வெல்லம்
சாக்லேட்
வாழைப்பழம்
பலாப்பழம்
மாம்பழம்

கீழ் கண்டுள்ள நிலைபாடுகளின் மூலம் நீரிழிவு கட்டுப்பாடிற்குள் இருப்பதை உறுதி செய்யலாம்:

1. நீரிழிவின் அறிகுறிகள் இல்லாதிருத்தல்.
2. உடல் எடை சீராக இருத்தல்.
3. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80 - 100 மில்லி கிராமிர்க்குள் இருத்தல்.
4. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு 200 மில்லி கிராமிர்க்குக் கீழாகவும், டிரை கிளிசரைடு 140 மில்லி கிராமிற்கு குறைவாகவும் இருத்தல்.
5. சிறுநீரில் சர்க்கரை இல்லாதிருத்தல்.



முடிந்தவரை இயற்கையுடன் இசைந்து வாழ்தலே இதுபோன்ற நோய்களை தவிர்க்க சிறந்த வழியாகும்.